சனி, 23 ஜனவரி, 2016

டாஸ்மாக்

எல்லோரும் குடியின் தீமைகளை மட்டும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். குடியுடன் சேர்ந்த மற்ற தீமைகளை பற்றி யாரும் பேசுவது கிடையாது .  சிக்கன் வாங்க கடைக்கு சென்றால் உயிருடன் 130, உரித்தது 160, தோல் நீக்கியது 190 என்று கண் எதிரே பார்த்து பார்த்து வாங்க முடிகிறது. அனால் டாஸ்மாக் பாரில் விற்கப்படும் சால்னா எனப்படும் கறி வகைகள் நினைத்தாலே குமட்டுபவையாய் இருக்கின்றன;

கடைகளில் கழிவாய் விற்கப்படும் கோழிப் கால்கள், கோழி தலைகள்,  பலர் வேண்டாம் என்று கழித்து கட்டும் லிவர் போன்றவை, கெட்டுப்போன மீன்கள், போன்றவற்றை கரமான மசாலாவில் முக்கி பொரித்து விற்கிறார்கள். அந்த எண்ணெய் ... நினைக்கும்போதே குமட்டுகிறது .  ஐந்து நிமிடம் தொடர்ந்தாற்போல் அந்த கடை அருகே பொரிக்கும்போது நின்றால் வந்தி நிச்சயம் .

போதையில் இருந்தால் ஒழிய அவற்றை தின்ன முடியாது ..

ஏன் யாருக்கும் அக்கறை இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக