வியாழன், 17 மார்ச், 2016

திங்கள், 25 ஜனவரி, 2016

டாஸ்மாக் 1

டாஸ்மாக் பார் உள்ளே செல்ல நேர்பவர்கள் மிகவும் பரிதாபத்துக்கு உரியர்வகள் ...

லேபல் காசுக்கு மேலே பத்து ரூபாய் ... ஐம்பது காசு பெறாத பிளாஸ்டிக் கப் ஐந்து ருபாய்.... தண்ணீர் பாக்கெட்  ஐ எஸ் ஐ இருப்பது, இல்லாதது எதுவானாலும் காசு...... குப்பைக்கு மட்டுமே  லாயக்கான சிறு தீனிகள்.

தரை முழுதும் கடித்து துப்பிய பீர் பாட்டில் மூடிகள், chair , டேபிள்  எங்கும் பளபளக்கும் excise டிபார்ட்மெண்ட் ஸ்டிக்கர்கள், கழுவபபடாத வாந்தி ,
வயிற்றை குமட்டும் நாற்றம் , 

எல்ல கிருமி பயபுல்லய்ங்கலும் இங்கேதான் இருக்காங்க ...

நீ வாங்கும் ஒவ்வொரு பாட்டிலும் அரசும்... அரசுக்கு நெருக்கமான தொழில் அதிபர்களும் கொழிக்கிறார்கள்...

உன் உரிமை... உன் பணம் ... ஜாகோ க்ரஹக் ஜாகோ 

ஏன் யாருக்கும் அக்கறை இல்லை.
  

சனி, 23 ஜனவரி, 2016

டாஸ்மாக்

எல்லோரும் குடியின் தீமைகளை மட்டும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். குடியுடன் சேர்ந்த மற்ற தீமைகளை பற்றி யாரும் பேசுவது கிடையாது .  சிக்கன் வாங்க கடைக்கு சென்றால் உயிருடன் 130, உரித்தது 160, தோல் நீக்கியது 190 என்று கண் எதிரே பார்த்து பார்த்து வாங்க முடிகிறது. அனால் டாஸ்மாக் பாரில் விற்கப்படும் சால்னா எனப்படும் கறி வகைகள் நினைத்தாலே குமட்டுபவையாய் இருக்கின்றன;

கடைகளில் கழிவாய் விற்கப்படும் கோழிப் கால்கள், கோழி தலைகள்,  பலர் வேண்டாம் என்று கழித்து கட்டும் லிவர் போன்றவை, கெட்டுப்போன மீன்கள், போன்றவற்றை கரமான மசாலாவில் முக்கி பொரித்து விற்கிறார்கள். அந்த எண்ணெய் ... நினைக்கும்போதே குமட்டுகிறது .  ஐந்து நிமிடம் தொடர்ந்தாற்போல் அந்த கடை அருகே பொரிக்கும்போது நின்றால் வந்தி நிச்சயம் .

போதையில் இருந்தால் ஒழிய அவற்றை தின்ன முடியாது ..

ஏன் யாருக்கும் அக்கறை இல்லை
சமிப காலங்களில் நான் பார்க்கும் மாற்றங்களில் முக்கியமானது மருத்துவ துறையில் ஏற்பட்டதுதான்:

சென்னை முழுவதும் விரவியிருக்கும் - செயற்கை கருத்தரிப்பு மையம்கள் 

கடந்த பத்து ஆண்டுகளில் பத்து மடங்காகியிறது :